தாயுமானவர்'s image
2 min read

தாயுமானவர்

Subramania BharatiSubramania Bharati
0 Bookmarks 260 Reads0 Likes


தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு
(ராகம் - நாதநாமக்கிரியை) [தாளம் - ஆதி]

பல்லவி

வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)

சரணங்கள்

ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஓன்றே- அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே. (வந்தே)


ஈனப் பறையர்க ளேனும்- அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ- பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)


ஆயிரம் உண்டிங்கு ஜாதி- எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி? -- ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்- தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)


ஒன்று பட்டால் உண்டு வாழ்வே- நம்மில்
ஒற்றுமை நீங்கில் அ‎னைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்- இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)


எப்பதம் வாய்த்திடு மேனும் நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்படு கோடியும் வாழ்வோம்- வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம். (வந்தே)


புல்லடி மைத்தொழில் பேணிப்- பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர-- இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே

No posts

Comments

No posts

No posts

No posts

No posts