தான தனந்தன's image
2 min read

தான தனந்தன

Subramania BharatiSubramania Bharati
0 Bookmarks 386 Reads0 Likes

தான தனந்தன தான தனந்தன
தானனத் தானா னே.

முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடைவில்? - எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவிநல்
ஆரிய ராணியின் வில். 1

இந்திர சித்தன் இரண்டு துண்டாக
எடுத்தவில் யாருடைய வில்? - எங்கள்
மந்திரத் தெய்வதம் பாத ராணி
வயிரவி தன்னுடை வில். 2


‘ஒன்று பரம்பொருள் நாம்அதன் மக்கள்
உலகின்பக் கேணி’ என்றே - மிக
நன்று பல்வேதம் வரைந்தகை பாரத
நாயகி த‎ன்திருக் கை. 3

சித்த மயமிவ்வுலகம் உறுதிநம்
சித்தத்தில் ஓங்கிவிட் டால் - துன்பம்
அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்
ஆரிய ராணியின் சொல். 4

சகுந்தலை பெற்றதேர் பிள்ளைசிங் கத்தினைத்
தட்டி விளை யாடி - நன்று
உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி
ஒளியுறப் பெற்ற பிள்ளை. 5

காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது
கல்லொத்த தோள்எவர் தோள்? - எம்மை
ஆண்டருள் செய்பவள், பெற்று வளர்ப்பவள்
ஆரிய தேவியின் தோள். 6

சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம்
தந்த தெவர் கொடைக்கை? - சுவைப்
பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும்
பாரத ராணியின் கை. 7

போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை
புகன்ற தெவருடை வாய்? - பகை
தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத
தேவி மலர்த்திரு வாய். 8

தந்தை இனிதுறத் தான்அர சாட்சியும்
தையலர் தம்முறவும் - இனி
இந்த உலகில் விரும்புகி லேன்என்றது
எம்அனை செய்த உள்ளம். 9

அன்பு சிவம்உல கத்துயர் யாவையும்
அன்பினிற் போகுமென்றே - இங்கு
முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்
மொழியெங்கள் அன்னைமொழி. 10

மிதிலை எரிந்திட வேதப் பொருளை
வினவும் சனகன் மதி - தன்
மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது
வல்லநம் அன்னை மதி. 11

தெய்விகச் சாகுந் தலமெனும் நாடகம்
செய்த தெவர் கவிதை? - அயன்
செய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத
தேவி அருட் கவிதை. 12

No posts

Comments

No posts

No posts

No posts

No posts