கலைஞரைப்'s image
1 min read

கலைஞரைப்

S. Abdul RahmanS. Abdul Rahman
0 Bookmarks 156 Reads0 Likes

கலைஞரைப் புகழ்ந்து எழுதிய கவிதை
என் கவிதை உனக்கு பூச்சொரியும்:
… ஏனெனில் நீ எனக்கு ஆச்சரியம்.
முதுகு வலிக்கிறது உனக்கு..
வலிக்காதா…
எத்தனை காலம்தான்
எங்களை சுமக்கிறாய்.
ஒரு நாள்
தமிழிடம் முகவரி கேட்டேன் -
அது மே/பா மு.கருணாநிதி என்றது.
இரட்டை இலை விரித்து
நாட்டையே உண்டவர்களை
எச்சில் இலையாக்கி
குப்பைத் தொட்டியில்
எறிந்தாய் நீ.
நட்சத்திர ஆட்சியை
இனி இந்த நாடு தாங்காது.
சில நட்சத்திரங்கள்
நாட்டை ஆள ஆசைப்படுகிறது…
தமிழா விழித்துக் கொள்…
வெள்ளித் திரை ஆட்சிக்காக
உன் வேட்டியும் உருவப்படாலாம்….
- கவிக்கோ

 

No posts

Comments

No posts

No posts

No posts

No posts