தொன்று நிகழ்ந்த's image
2 min read

தொன்று நிகழ்ந்த

Subramania BharatiSubramania Bharati
0 Bookmarks 2801 Reads0 Likes

தொன்று நிகழ்ந்த த¨‎னத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம்எங்கள் தாய். 1

யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
ளாயினு மேயெங்கள்தாய் - இந்தப்
பாருள் எந் நாளுமோர் கன்னிகை என்னப்
பயின்றிடு வாள் எங்கள் தாய். 2

முப்பதுகோடி முகமுடை யாள் உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் - இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்
சிந்தனை ஒன்றுடை யாள். 3

நாவினில் வேத முடையவள் கையில்
நலந்திகழ் வாளுடை யாள் - தனை
மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடை யாள். 4

அறுபது கோடி தடக்கைக ளாலும்
அறங்கள் நடத்துவள் தாய் -தனைச்
செறுவது நாடி வருபவ ரைத்துகள்
செய்து கிடத்துவள் தாய். 5

பூமி யினும்பொறை மிக்குடை யாள்பெரும்
புண்ணிய நெஞ்சினள்தாய் - எனில்
தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந்
துர்க்கை யனையவள் தாய். 6

கற்றைச் சடைமதி வைத்த துறவியைக்
கைதொழு வாள் எங்கள்தாய் - கையில் ஒற்றைத்
திகிரி கொண் டேழுல காளும்
ஒருவனை யுந்தொழு வாள். 7

யோகத்தி லேநிக ரற்றவள் உண்மையும்
ஒன்றென நன்றறி வாள் - உயர்
போகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும்
பொற்குவை தானுடை யாள். 8

நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரி வாள் எங்கள்தாய் - அவர்
அல்லவ ராயி னவரைவி ழுங்கிப்பின்
ஆனந்தக் கூத்திடுவாள். 9

வெண்மை வளர்ம யாசலன் தந்த
விறன்மக ளாம் எங்கள்தாய் - அவன்
திண்மை மறையினும் தான்மறை யாள்நித்தஞ்
சீருறு வாள் எங்கள்தாய். 10

No posts

Comments

No posts

No posts

No posts

No posts